இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பல சமூக ஊடகங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்டர்போல்  'தேடும் பட்டியலில்' இடம்பெற்றுள்ளதாகக் கூறி ஒரு கிராஃபிக் கார்டைப் பரப்பி வருகின்றன.

இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பல சமூக ஊடகங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்டர்போல் 'தேடும் பட்டியலில்' இடம்பெற்றுள்ளதாகக் கூறி ஒரு கிராஃபிக் கார்டை பரப்பி வருகின்றன. கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு அமித் ஷா அங்கீகாரம் அளித்ததாகக் குற்றம்சாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகி வந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மோரிசனின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், இதுபோன்ற தவறான தகவல்கள் இந்திய-கனடா ராஜதந்திர உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

பிடிஐ ஃபேக்ட் செக் செய்தியின் படி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கிராஃபிக் போலியானது. இன்டர்போலின் இணையதளத்திலோ அல்லது நம்பகமான செய்தி ஆதாரங்களிலோ இந்தக் கூற்றை ஆதரிக்கும் எந்தப் பதிவும் இல்லை என்று புலனாய்வு துறை உறுதிபடுத்தியுள்ளது. 

பிடிஐ ஃபேக்ட் செக் குழு வைரலான கிராஃபிக்கில் கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் தேடல் மேற்கொண்டது. இதில் செய்தியை உறுதிபடுத்தும் நம்பகமான செய்திகள் எதுவும் இல்லை. கூடுதலாக, இன்டர்போலின் இணையதளத்தில் "அமித் ஷா" என்று நேரடியாகத் தேடியதில் அத்தகைய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

'Khaber.tv' என்ற பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஃபேஸ்புக் பக்கம் மூலம் இந்த வதந்தி பரப்பப்பட்டதாகத் தெரிகிறது. இது நவம்பர் 1 அன்று அமித் ஷாவின் புகைப்படத்துடன் கூடிய கிராஃபிக் கார்டைப் பகிர்ந்துள்ளது. "நம்பகமான வட்டாரங்கள்" இன்டர்போல் தேடும் பட்டியலில் அமித் ஷா சேர்க்கப்பட்டதாகவும், கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணம் என்றும் இந்தப் பதிவில் தெரிவித்து இருந்தது. 

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பல சமூக ஊடக பயனர்கள் இந்த அதிர்ச்சியூட்டும் கிராஃபிக்கை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இருப்பினும், இந்தப் பதிவுகள் இப்போது சமூக ஊடக தளத்தில் கிடைக்கவில்லை.

அமித் ஷாவுக்கு எதிரான இன்டர்போல் 'தேடப்படும்' அறிவிப்பின் வைரல் படம் போலியானது

ஏசியாநெட் நியூஸ் "இன்டர்போல் அறிவிப்பு அமித் ஷா" என்ற முக்கிய வார்த்தைக்கான தேடலை நடத்தியது, இதில் இந்திய அல்லது சர்வதேச ஆதாரங்களில் இருந்து அத்தகைய குறிப்பிடத்தக்க கூற்று பற்றிய நம்பகமான அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது.

அடுத்து, இன்டர்போலின் இணையதளத்தில் தேடினோம். இந்தத் தேடலில் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதலாக, "அமித் ஷா" மற்றும் "அமித் அனில்சந்திர ஷா" ஆகியவற்றிற்கான தேடல்களும் எந்த சிவப்பு அல்லது மஞ்சள் அறிவிப்புகளையும் (பிந்தையது காணாமல் போன நபர்களைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக வெளியிடப்பட்டது) வெளிப்படுத்தவில்லை. மேலும் வைரல் கிராஃபிக் தவறானது என்பதை உறுதிப்படுத்தியது.

கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது

நவம்பர் 2 அன்று, அமித் ஷாவுக்கு எதிரான ஒட்டாவாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. "துணை அமைச்சர் டேவிட் மோரிசன் குழுவின் முன் இந்திய மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குறிப்புகளை வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது," என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

"இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்," என்றும் அவர் கண்டித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசு முகவர்கள் ஈடுபட்டதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதிலிருந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.