சிங்கப்பூர் பூங்காக்களில் இரவு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சிங்கப்பூரின் இயற்கைப் பகுதிகளில் இதேபோன்று இரவு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை இந்த பதிவில் காணலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

1.டார்ச்லைட் 

இரவில் நடைப்பயிற்சி செல்பவர்கள் நல்ல வெளிச்சம் தரும் டார்ச்லைட் அல்லது ஹெட்லேம்ப் எடுத்துக்கொள்வது அவசியம். இரவு நேரத்தில் உயிரினங்களை அவற்றின் ஒளிரும் கண்களால் எளிதாக கண்டறியலாம். பொதுவாக இரவில் செயல்படும் முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பில்லாத விலங்குகளின் கண்களில் பிரதிபலிப்பு மேற்பரப்பைக் காணலாம். அத்தகைய விலங்குகளில் பாம்புகள் மற்றும் சிலந்திகள் அடங்கும். இந்த சவ்வு இருப்பதால் விலங்குகள் மங்கலான வெளிச்சத்தில் மிகவும் துல்லியமாக பார்க்க முடியும். பெரும்பாலும், ஒரு விலங்கின் முதல் பகுதியான, அதன் கண் பிரகாசமாக இருக்கும்.விலங்குகளின் கண்களில் அதிக நேரம் ஒளி வீசுவதைத் தவிர்க்கவும், அது திடுக்கிடச் செய்யலாம்.

2. நேரத்தை சரிபார்க்கவும்

தேசிய பூங்கா வாரியத்தின் இணையதளத்தில் சிங்கப்பூரில் உள்ள பூங்கா போன்ற இடங்களின் திறக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் இயற்கை வனங்களுக்குள் இரவு 7 மணிக்கு மேல் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. பூங்காக்கள் மற்றும் காடுகளில் மூடப்பட்ட நேரத்திற்குப் பிறகு நுழைபவர்களுக்கு $ 2,000 வரை அபராதம் விதிக்கப்படும். பிஷன்-ஆங் மோ கியோ பூங்கா போன்ற சிங்கப்பூரில் பெரும்பாலான பூங்காக்கள் இரவு 7 மணிக்குப் பிறகு திறந்திருக்கும்.

3. வனவிலங்குகளை தெரிந்து கொள்ளுங்கள்

சிங்கப்பூரில் எந்தெந்த இனங்கள் இரவில் சுறுசுறுப்பாக இயங்குகின்றன, அவற்றை எங்கு காணலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். காடுகளில் பொதுவாகக் காணப்படும் சில இரவு நேர உயிரினங்கள் பொதுவான பனை சிவெட் மற்றும் நைட் ஜார்கள் ஆகும்.

4. சரியான பாதையில் செல்லவும்

இரவில் திறந்திருக்கும் சில பூங்காக்கள் காடுகளுக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அழிந்து வரும் தாவரங்களை அடைக்க முனைகின்றது. எனவே நடைபயிற்சியோ அல்லது மலையேறுபவர்களோ பாதையை விட்டு மாறினால் காட்டுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

5. புகைப்படங்களை மட்டும் எடுக்கவும்

எந்தவொரு வனவிலங்குகளையும் கொல்வது, பொறி வைப்பது, எடுத்துச் செல்வது அல்லது வைத்திருப்பது சட்டவிரோதமானது. பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை அவ்வாறு செய்பவர்களுக்கு $50,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். மற்ற வனவிலங்குகளைக் கொல்வோர், சிக்கவைப்பவர், எடுத்துச் செல்லவோ அல்லது வைத்திருப்போருக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். சத்தம் போடுவதை தவிர்க்கவும். இது வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் பீதியை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக உயிரினங்கள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.

6. வழிகாட்டிகள் அவசியம்

தனியாக இரவு நடைப்பயிற்சி செல்வது அச்சுறுத்தலாகத் தோன்றினால், வழிகாட்டப்பட்ட இரவு நடைப்பயிற்சியில் செல்லலாம். இங்குள்ள பல இயற்கைக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் இலவசமாகவோ அல்லது கட்டணமாகவோ இரவு நேர நடைப்பயிற்சிகளை நடத்துகின்றன. அவற்றில் அறிவியல் மற்றும் வனவிலங்கு கல்வி சேனல் ஜஸ்ட் கீப் திங்கிங், உள்ளூர் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பான அன்டேம்ட் பாத்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஊர்வன மற்றும் நீர்வீழ்ச்சி ஆர்வலர் குழு ஹெர்பெட்டாலஜிக்கல் சொசைட்டி ஆகியவை அடங்கும்.

திருடன் யாரா இருக்கும்.? 50 லட்சத்துக்கும் அதிகமான கொள்ளை பொருட்களை கண்டுபிடித்த ஆப்பிள் ஏர்டேக்! அடேங்கப்பா