ஐஐடியில் பெண் சடலம் கண்டெடுப்பு - மாணவர் விடுதியில் போலீஸ் தீவிர விசாரணை...
சென்னை ஐஐடி யில் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பிரம்மபுத்திரா மாணவர் விடுதி பின்புறம் மிகுந்த துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அங்கு இருக்கும் மானார்கள் அங்கு சென்று பார்த்த போது சென்னை ஐஐடியின் வளாகத்தில் உள்ள முட்புதரில் 40 வயது மதிக்க தக்க பெண் சடலம் கிடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.