Asianet News TamilAsianet News Tamil

300 கிளப்புக்கு கருணை வரவேற்ற சேவாக்…

welcome to-300-club
Author
First Published Dec 20, 2016, 11:50 AM IST


300 ஓட்டங்களை எடுத்தவர் கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று கருணை வாழ்த்தியுள்ளார் சேவாக்.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் எடுத்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்ஸர், 32 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த 2-ஆவது இந்தியர் என்ற வரலாற்று சிறப்பைப் படைத்தார். கருண் நாயர் தனது 3-ஆவது போட்டியிலேயே முச்சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு முச்சதங்களை இருமுறை எடுத்த இந்திய வீரர் சேவாக், கருண் நாயருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

300 கிளப்புக்கு நல்வரவு. கடந்த 12 வருடங்கள் 8 மாதங்களாக நான் மட்டுமே தனியாக இருந்தேன் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios