சென்னையை நெருங்கி வரும் வர்தா புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் உதவி கேட்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வர்தா புயல் நாளை பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் என அறிவிக்கபட்டுள்ளதையடுத்து அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக புயல் காற்று மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் அது குறித்து 1070 என்ற என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

044 - 2536 7823

044 - 2538 7570

044 - 2561 9206

044 - 2561 9511

ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல்

9445477207

9495477206

ஆகிய வாட்சப் எண்களிலும் தொடர்பு கொண்டு புயல் வெல்ல பாதிப்புகள் குறித்து தகவலோ அல்லது உதவியோ பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.