Asianet News TamilAsianet News Tamil

குறையாத கொரோனா.. இன்று ஒரே நாளில் 23,989 பேர் பாதிப்பு.. சென்னையில் மேலும் அதிகரிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,989 ஆக அதிகரித்துள்ளது. 
 

today corona positive case
Author
Tamilnádu, First Published Jan 15, 2022, 8:35 PM IST

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,459  ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 530 அதிகரித்து 23,989 ஆக பதிவாகியுள்ளது. 1,43,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,989 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,989 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் 8,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்றை விட மேலும்15 பேர் அதிகரித்து புதிதாக் 8,978 பேருக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 23,978 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 11 பேர் என 23,989 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,967 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 7 பேரும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,31,007 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,03,610 இல் இருந்து 1,31,007 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 10,988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,47,974 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,854 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் கோவையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1732 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,478 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 631 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 550 ஆக குறைந்துள்ளது.சேலத்தில் 499 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 427 ஆக குறைந்துள்ளது.

ஈரோட்டில் 355 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 542 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 802 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 697 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 572 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 659 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் 477ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 443 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 353 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 175 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 410 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 443 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios