கால அவகாசம் குறைவாக இருப்பதால், 10, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

பொதுத்தேர்வு :

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால், 10, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்னது போல் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டும். 

நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் :

உங்களுக்கு தெரிந்ததை தேர்வில் நம்பிக்கையுடன் எழுதுங்கள். தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம். கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் போது பதற்றமடையாமல் இருப்பதற்காகத் தான் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே மாணவர்கள் பொறுப்புடன் இப்பொழுதே படிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : Pakistan : நள்ளிரவில் கவிழ்ந்த இம்ரான்கான் அரசு..நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடந்த திடீர் ‘ட்விஸ்ட்’ !!