தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை... தண்டையார்பேட்டையில் பரபரப்பு....
தலையில் கல்லைப்போட்டு முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தண்டையார் பேட்டையில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோயில் தெருவில் சாலையோரத்தில் வசித்து வந்தவர் விநாயகம் (60).
விநாயகம் இன்று காலை அதே பகுதியில் சாலையோர பிளாட்பாரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு
கிடந்தார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விநாயகம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விநாயகத்துடன், உதயகுமார் என்பவர் தங்கியிருந்தது தெரிய வந்தது.
உதயகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரிணை நடத்தினர். அவர் மதுபோதையில் இருந்ததால் முழுமையாக விசாரணை
நடத்த முடியவில்லை என்றும், மதுபோதை தெளிந்த பிறகே உதயகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார்
கூறியுள்ளனர்.