தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தர தொழில்துறை சார்பில் சர்வேத தேநீர் தினத்தையொட்டி 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தர தொழில்துறை சார்பில் சர்வேத தேநீர் தினத்தையொட்டி 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் தரமான,கலப்படமற்ற தேநீர் பொதுமக்களுக்கு கிடைக்கபெறும் வகையிலும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் 10 கடைகளும், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 கடைகளும் , கோவையில் 4 கடைகளும் என முதற்கட்டமாக 20 நடுமாடும் தேநீர் கடைகள் முதலமைச்சர் இன்று கொடியசைத்து துவங்கிவைத்தார்.

இந்த நடமாடும் கடைகளில் தேநீரோடு சேர்த்து பிஸ்கட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

Scroll to load tweet…