Tamil comedy actor raised sensational questions against government
ஜனநாயக நாட்டில் புற்றுநோயிடம் இருந்து, தங்கள் வருங்கால சந்ததியை காத்திட போராடிய மக்களை, துப்பாக்கி முனையில் வென்றிட நினைத்த அரசாங்கத்தால், இன்று 11 அப்பாவி மக்கள் உயிர் பலியாகியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட யாருமே இப்படி ஒரு தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். அமைதியான முறையில் மட்டுமே 100 நாள் வாரை போராடிய இவர்களுக்கு, இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இப்படி ஒரு நிகழ்வுக்கு யார் காரணம்? இப்படி பொது மக்கள் உயிரை பறிக்கும் அதிகாரத்தை அரசுக்கு யார் கொடுத்தது? என அனைத்து ஊடகங்களிலும் இந்த சம்பவம் கூறித்து கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தெரிவித்திருக்கும் வெளிப்படையான கருத்துக்கு, மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.
”நீங்கள்எல்லாம்யாருக்குதொண்டுஆற்றஅரசியலுக்குவந்தீர்கள்? கார்ப்ரேட்அரசியலில்கைக்கூலிகள்நீங்கள். உங்களுக்கெல்லாம் அசிங்கமாகஇல்லைஒருஅரசியல்வாதிஎன்றுசொல்ல, சுடுவதற்குயார்உங்களுக்குஉரிமைகொடுத்தது? என அவர் எழுப்பியிருக்கும் ஒவ்வொரு கேள்விகளிலும் தமிழக அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் மயில்சாமி.
