Asianet News TamilAsianet News Tamil

வங்கி கணக்கில் குவிந்த திடீர் லட்சங்கள்...! கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத கதியில் பணியாளர்கள்..!

Suddenly lakhs of amount credited the bank accounts
Suddenly lakhs of amount credited the bank accounts
Author
First Published Feb 9, 2018, 3:51 PM IST


பழனி பாப்பம்பட்டி எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி பாப்பம்பட்டியில் ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த ஊரில் 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் பலரும் ஸ்டேட் வங்கியில் தான் கணக்கு தொடங்கியுள்ளனர். 

வேலைக்கான சம்பளம் இந்த வங்கி கணக்கில்தான் பணியாளர்களுக்கு வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் கணக்கில் திடீரென லட்சக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. 

இதையடுத்து லட்சக்கணக்கில் பணம் குவிந்ததால் வாடிக்கையாளர்கள் கணக்குகளை அதிரடியாக அதிகாரிகள் முடக்கினர். 

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் ஏழை தொழிலாளர்கள் பணம் எடுக்க முடியாமல்  தவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios