Subhash Chandrabose was not killed in plane crash Request Central Government to publish factual information ...
மதுரை
மதுரையில் இராஷ்டிரிய சுவாபிமான் அந்தோலன் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ராஜ்யஸ்ரீசவுத்ரி, "எனது கொள்ளு தாத்தா சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. அவரது இறப்பு குறித்த உண்மையாக தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இராஷ்டிரிய சுவாபிமான் அந்தோலன் அமைப்பு சார்பில் தமிழ்நாடு நிர்வாகிகள் அறிமுகம், சமூக ஆர்வலர்கள் சந்திப்பு, தேசிய சிந்தனையாளர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இராஷ்டிரிய சுவாபிமான் அந்தோலன் அமைப்பு சார்பில் தமிழ்நாடு நிர்வாகிகள் அறிமுகம், சமூக ஆர்வலர்கள் சந்திப்பு, தேசிய சிந்தனையாளர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவை நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கொள்ளு பேத்தி ராஜ்ய ஸ்ரீசவுத்ரி குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாள்ர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்யஸ்ரீசவுத்ரி, "எனது கொள்ளு தாத்தா சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. அவரது இறப்பு குறித்த உண்மையாக தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விழாவில் அமைப்பின் நிறுவனர் கோவிந்தாச்சாரியா சிறப்புரையாற்றி தேசிய சிந்தனையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளார் மாயாதேவிசங்கர் நன்றி தெரிவித்தார்.
