Asianet News TamilAsianet News Tamil

ஈஷா யோகா மையத்தில் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

Isha Yoga Center student who died in the incident
student drowned-dead-in-isha-yoga
Author
First Published Mar 10, 2017, 3:21 PM IST


ஈஷா யோகா மையத்தில்  மாணவர்  உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கோவை மாவட்டம்  வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது  ஈஷா யோகா மையம் . சமீபத்தில் கூட  பாரத பிரதமர்  மோடி , மிக உயரிய அடியில் உருவான சிவன் சிலையை அங்கு  திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஈஷா யோகா மையத்தில், பாதரசம்  மற்றும் மெர்குறி போன்றவற்றால் உருவாக்கப்பட்ட சிலைகள்   அடங்கிய சூரிய குண்டத்தில் நீராடும் போது 21 வயது  மதிக்கத்தக்க மாணவர் ரமேஷ் என்பவர்  உயிரிழந்தார்.

student drowned-dead-in-isha-yoga

திருவண்ணாமலை  மாவட்டம், கோட்டை மேடு  பகுதியை  சேர்ந்த மன்னார் சாமி என்பவரின் மகன் ரமேஷ். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியான ஜி டெக் கல்லூரியில் மூன்றாமாண்டு  சிவில் என்ஜினியர் படிப்பை படித்து வந்தார்.

இந்நிலையில், ரமேஷ் சக மாணவர்களோடு ஊட்டி செல்ல திட்டமிட்டு , செல்லும் வழியில்  வெள்ளியங்கிரி  செல்ல முடிவெடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சூரிய குண்டத்தில் அனைவரும்  நீராடி  உள்ளனர் . சூரிய குண்டத்தில் உள்ள நீரோ  அதிக குளிமையாக  இருக்கும் பட்சத்தில்,  ரமேசுக்கு  வலிப்பு  ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

student drowned-dead-in-isha-yoga

உடனடியாக   ரமேசுக்கு  முதலுதவி செய்து , மேல் சிகிச்சைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் போது  ரமேஷ்  பரிதாபமாக  உயிரிழந்தார் . தற்போது அவருடைய  உடல்  பிரேத  பரிசோதனைகாக  கோவை  அரசு  மருத்துவமனையில்  வைக்கபட்டுள்ளது .

இது குறித்து போலீசார்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios