ST JOSEPH KARUNAI ILLAM MISUSING OLS AGE PEOPLE

சென்னையில் பயங்கரம்...! சிக்கியது செயின்ட் ஜோசப் கருணை இல்லம்..! முதியவர்களை கடத்தி மருத்துவ ஆராய்ச்சி..!

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் ஆதரவு இல்லாத வயதான் முதியவர்களை கடத்தி மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.

இதற்காக அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று ஆதரவு இல்லாத முதியவர்களை தேர்வு செய்து தங்கள் கருணை இல்லத்தில் கருணையோடு பார்த்துக்கொள்வதாக கூறி,கட்டாயமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

மொட்டை

அவ்வாறு அழைத்து செல்லும் முதியவர்களுக்கு மொட்டை அடித்துவிட்டு, மனநல நோயாளி போன்று உருவாக்குகிறார்கள்.

கடத்தல்

இதற்கிடையில்,எங்கேயாவது முதியவர்கள் தனிமையில் இருப்பதை கண்டால், அவர்களை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ள வண்டியில் அழைத்து செல்கின்றனர்.

TN 57,AM 3351 வண்டி எண்

அவ்வாறு அழைத்து செல்லும் போது, இன்று ஒரு பாட்டி, "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என அலறவே அதனை பார்த்த ஊர்மக்கள் சந்தேகம் அடைந்து அந்த ஆம்புலன்சை திறந்து பார்க்கும் போது தான் தெரியவந்துள்ளது அனைத்து விவரமும்...

அந்த ஆம்புலன்சில்(TN 57,AM 3351 வண்டி எண்) தாக்கலில் வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள்; சமையல் செய்வதற்காகவும்,துணியால் சுற்றப்பட்ட ஒரு வயதான பெண் உடலும்,உயிருள்ள ஒரு வயதான பெண்மணியும்,ஒரு முதியரும் இருந்துள்ளனர்

முதியவரை மீட்ட பொதுமக்கள்

முதியவரை மீட்டு பொதுமக்கள் விசாரிக்கவே அனைத்து விவரத்தையும் சொல்லி அழுதுள்ளார்.

இது குறித்து போலிசில் விவரம் தெரிவிக்க,காட்டு தீ போல் பரவி,தற்போது அதிகாரிகள் அந்த இல்லத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில் கருணை இல்லம் என்ற பெயரில் பல தவறுகள் அங்கு நடந்து வருவதை அறிந்த ஒரு சிலர் ஏற்கனவே பலமுறை பொலிசாரிடம் புகார் தெரிவித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் பிரச்னை பெரியதாகவே தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

மேலும், இவ்வாறு கடத்தப்படும் முதியவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதும்,இறந்த சடலத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைத்து,சில குறிப்பிட்ட நாட்கள் கழித்து அதனை எடுத்து மருந்து தயாரிப்பதும் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் திண்டுக்கல் இரும்புலியூர்,பாலேஸ்வரம்,வேலூர் ஆகிய இடங்களில் உள்ளது செயிண்ட் கருணை இல்லம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.