sondharya rajinikanth divorce case
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருடன் திருமணம் நடைபெற்றது.
தற்போது இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெற முடிவு செய்தனர்.
இந்நிலையில் இவர்களுடைய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவும், அவருடைய கணவரும் கோர்ட்டில் ஆஜராகினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையின் போது இவர்கள் ஏன் பிரிய நினைக்கின்றனர் என்கிற காரணத்தை எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இரு தரப்பினருடைய கருத்துக்களை அறிந்த பிறகு, விவாகரத்து வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
