Asianet News TamilAsianet News Tamil

ஒரு சட்டை 50 ரூபாய்க்கு தர்றோம்…! கடையில் குவிந்த மக்கள்… அதிகாரிகள் செஞ்ச காரியம்..

புதுக்கோட்டை அருகே 50 ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பதாக துவக்க நாளில் அறிவித்த புதிய துணிக்கடையை அதிகாரிகள் இழுத்து மூடினர்.

Shirt shop sealed
Author
Pudukkottai, First Published Sep 19, 2021, 6:54 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 50 ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பதாக துவக்க நாளில் அறிவித்த புதிய துணிக்கடையை அதிகாரிகள் இழுத்து மூடினர்.

Shirt shop sealed

புதியதாக வியாபாரம் தொடங்குவர்கள் அளிக்கும் சலுகைகளுக்கு என்று மதிப்பு உண்டு. அது ஸ்வீட் கடையாகட்டும், ஓட்டல் கடையாகட்டும் ஆரம்ப நாளில் அறிவிப்புகள் தூள் பரத்தும். அப்படிப்பட்ட அறிவிப்புகளை பார்க்கும் மக்கள் திரள்வது வழக்கமான ஒன்று.

இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் புதியதாக இன்று ஒரு துணிக்கடை திறக்கப்பட்டது. முதல் நாள் சலுகையாக ஒரு சட்டையின் விலை 50 ரூபாய் என்று அறிவித்தது. அவ்வளவு தான்… எங்கிருந்து தான் மக்கள் வந்தார்களோ தெரியவில்லை… திபுதிபுன்னு கூட்டம் திரண்டு வர இந்த விவரம் சுகாதார துறை அதிகாரிகள் காதுகளுக்கு சென்றது.

Shirt shop sealed

உடனடியாக கிளம்பி வந்த அதிகாரிகள் கொரோனா விதிகளுக்கு மாறாக மக்கள் கூட்டத்தை அனுமதித்ததாக கூறி கடைக்கு சீல் வைத்தனர். கடை திறக்கப்பட்ட முதல் நாளே மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.

Follow Us:
Download App:
  • android
  • ios