Asianet News TamilAsianet News Tamil

பெண்களுக்கு மது விருந்து... நிர்வாணமாக வீடியோ காலில் ஹாஸ்டல் ஓனர்! மாணவிகளை உல்லாசத்துக்கு தள்ளிய இளம் பெண்!

sexual harassment complaint against on women hostel owner
sexual harassment complaint against on women hostel owner
Author
First Published Jul 25, 2018, 5:11 PM IST


பெண்களைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் சிக்கித் தலைமறைவாகியிருக்கிறார், கோவையில் உள்ள தனியார் பெண்கள் விடுதியின் உரிமையாளர் ஒருவர். ` பர்த் டே பார்ட்டி' என்ற பெயரில் கல்லூரி மாணவிகளை திசைதிருப்ப முயற்சி நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகிவிட்டனர்' என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

கோவை, பீளமேட்டில் ஹோப் காலேஜ் பகுதியில் `தர்ஷணா பெண்கள் ஹாஸ்டலில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும்  பெண்கள் என  சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இந்த பீளமேட்டைச் சேர்ந்த ஜெகநாதனுக்கு சொந்தமான இந்த ஹாஸ்டல் வார்டனாக புனிதா என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் விடுதியில் உள்ள மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் புனிதா. அங்கு மாணவிகளுக்குக் கட்டாய மதுவிருந்து அளித்துள்ளார். இந்தத் தகவல் விடுதியில் உள்ள மற்ற பெண்களுக்குத் தெரியவரவே, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, நள்ளிரவில் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர் பெற்றோர். இதை எதிர்பார்க்காத ஹாஸ்டல் வார்டன் புனிதா தலைமறைவாகிவிட்டார். 

ஹாஸ்டலில் உள்ள பெண்கள் சிலர், முன்னணி வார இதழுக்கு அளித்த கொடுத்த பேட்டியில்,`` பெரும்பாலும் போதையிலேயே இருப்பார் புனிதா. அன்னைக்கு சில மாணவிகளை மட்டும் 'ஹாஸ்டல் ஓனரின் ஸ்பெஷல் பார்ட்டி' என்றுகூறி வலுக்கட்டாயமாக ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு, விடுதி உரிமையாளர் ஜெகனாதனுக்கு வீடியோ கால் செய்து, ' சார்… உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க' என்றுகூறி அந்தப் பெண்களிடம் போனைக் கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிப் பார்த்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். வீடியோ காலில் முழு நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார் ஜெகநாதன்.  இதை பார்க்கமுடியாமல் சில மாணவிகள் கதறி அழுதுள்ளனர். ஆனாலும், அவர்களை தவறாக வழிநடத்த முயன்றிருக்கிறார் வார்டன் புனிதா. அங்கு சென்ற ஒரு மாணவி,  ஹாஸ்டலில் இருந்த மாணவிகளுக்குத் தெரியப்படுத்திருக்கிறார். அதன்பிறகே விவகாரம் காட்டுத்தீ போல பரவியது.

அனால் பெண்கள் தங்களின் எதிர்காலம் கருதி, புகார் அளிக்க முன்வராததால்,  அதேபகுதியில் இருப்பவர்களிடம் புகாரைப்  வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்து வார்டன் புனிதாவையும், தொழிலதிபர் ஜெகநாதனை தேடி வருகின்றனர். பீளமேடு  போலீசார், `` ஜெகநாதன், புனிதா ஆகிய இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இருபிரிவுகளின்கீழ் வழக்கு  பதிவு செய்து. இருவரையும் தீவிரமாகத் தேடி வருகிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios