Asianet News TamilAsianet News Tamil

“அக்கா  கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா".... “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” -  உரையில்  மனமுருகிய சசிகலா .....!!!

sasikala speech-jm46me
Author
First Published Dec 31, 2016, 2:08 PM IST


“அக்கா  கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா, “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” -  உரையில்  மனமுருகிய   சசிகலா .....!!!

அஇஅதிமுக  பொது செயலாளராக பொறுப்பேற்று கொண்ட சசிகலா, தனது முதல்   கன்னிப்பேச்சை கண்ணீர் மல்க  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசினார்.

அப்போது,  தனக்கும்  ஜெயலலிதாவிற்கும் இருந்த  நட்பு குறித்து ,  பேசிய  பல  இடங்களில்  அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார் .

எத்தனையோ ஆயிரம்  கூட்டங்களில் ஜெயலலிதாவுடன் பயணித்த நான், இப்போது முதன் முறையாக  அவர் இல்லாமல்,  பேசுகிறேன் என நா தழுதழுத்தார்.

ஒரு சிலர்  பல முறை  பார்த்து இருப்பார்கள் , ஒரு சிலர் சில  நொடி  பார்த்து  இருப்பார்கள், ஆனால்  33  ஆண்டு காலம் அவருடம் பழகி  அவருடைய கணீர் குரலை கேட்ட எனக்கு , அதிலிருந்து மீள முடியவில்லை என கூறிய சசிகலா,  " அக்கா  கோட்டைக்கு  கிளம்பிட்டீங்களா ...... மதியம் என்ன சாப்பாடு செய்யட்டும்’  இனி  இந்த கேள்விகளை  யாரிடம்  கேட்பேன்  என  நெகிழ்ச்சியுடன்  பேசினார்  சசிகலா

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios