“அக்கா கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா".... “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” - உரையில் மனமுருகிய சசிகலா .....!!!
“அக்கா கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா, “மதிய சாப்பாடு என்ன செய்யட்டும்” - உரையில் மனமுருகிய சசிகலா .....!!!
அஇஅதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்று கொண்ட சசிகலா, தனது முதல் கன்னிப்பேச்சை கண்ணீர் மல்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசினார்.
அப்போது, தனக்கும் ஜெயலலிதாவிற்கும் இருந்த நட்பு குறித்து , பேசிய பல இடங்களில் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார் .
எத்தனையோ ஆயிரம் கூட்டங்களில் ஜெயலலிதாவுடன் பயணித்த நான், இப்போது முதன் முறையாக அவர் இல்லாமல், பேசுகிறேன் என நா தழுதழுத்தார்.
ஒரு சிலர் பல முறை பார்த்து இருப்பார்கள் , ஒரு சிலர் சில நொடி பார்த்து இருப்பார்கள், ஆனால் 33 ஆண்டு காலம் அவருடம் பழகி அவருடைய கணீர் குரலை கேட்ட எனக்கு , அதிலிருந்து மீள முடியவில்லை என கூறிய சசிகலா, " அக்கா கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா ...... மதியம் என்ன சாப்பாடு செய்யட்டும்’ இனி இந்த கேள்விகளை யாரிடம் கேட்பேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார் சசிகலா