23 நாட்கள் கழித்து…! சதத்தை நோக்கி பெட்ரோல்… அதிர்ந்து ‘தெறித்த’ வாகன ஓட்டிகள்..
பெட்ரோல், டீசல் விலைகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் உயர்ந்து இருக்கிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலைகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் உயர்ந்து இருக்கிறது.
தினசரி விலை நிர்ணயம் என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்த தருணத்தில் தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையானது எந்த மாற்றமும் இன்றி காணப்பட்டது. இப்போது வாகன ஓட்டிகளின் வயிற்றை கலங்க வைப்பது போல் விலை உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 23 நாள்கள் விலை உயர்வு அதிர வைத்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.99.15 காசுகளாக இருக்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 24 உயர்ந்து ரூ.94.17 காசுகளாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீண்டும் வழக்கம் போல தினசரி விலை உயர்வு இருக்கும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டக்கூடும் என்று தெரிகிறது.