Asianet News TamilAsianet News Tamil

மக்களே அலர்ட் !! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29 ஆம் தேதி தொடங்குகிறது.. வானிலை மையம் தகவல்

தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழை அக்டோபர்‌ 29 ஆம்‌ தேதி ஒட்டி துவங்கக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. அன்று தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

Northeast Monsoon season will begin on October 29 in Tamil Nadu
Author
First Published Oct 26, 2022, 2:33 PM IST

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழை அக்டோபர்‌ 29 ஆம்‌ தேதி ஒட்டி துவங்கக்கூடும்‌.

இன்று தமிழக பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக

26.10.2022. 27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

28.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடியின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

29.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கடலூர்‌, விழுப்புரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, சிவகங்கை, விருதுநகர்‌, மதுரை,
தேனி, தென்காசி, திண்டுக்கல்‌, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலார்‌, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, கரூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:மக்களே !! மழை காலங்களில் இதை செய்யாதீர்கள்.. மின் வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சயஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

29.10.2022, 30.10.2022: தமிழக கடலோர பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.. இதுவரை 3 பேர் பலி..

Follow Us:
Download App:
  • android
  • ios