வெளிவந்த உண்மை..! இறுதி சடங்கிற்கு கூட உதவாத சொந்தங்கள்..! காரணமான காதல் திருமணம்..!
தாய் இறந்த பின்பும் யாரும் உதவி செய்ய வராததால், மருத்துவமனையில் உடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள்,பணம் கொடுத்து உதவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை பற்றி செய்திகளில் பார்த்தவர்கள் இப்படியுமா இருக்கும் இந்த உலகம்..? பாவம் அந்த பிள்ளைகள் என வருத்தப்பட்டு பேசி வந்தனர்.
இது உண்மை தான் ..ஆனால் இதற்கு பின்னணி என்ன தெரியுமா ?
காதல் திருமணம்....பெற்றோர்கள் காதல் திருமணம் செய்துக் கொண்டதால் வந்த வினை தான் இன்று இந்த மகன்கள் யாரும் இல்லாமல் தனி மரமாக அநாதையாக உள்ளனர்.
விளக்கம்
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விஜயா,இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த காளியப்பன் என்பவர் தைல வியாபாரத்திற்காக அங்கு சென்று உள்ளார்.
இவர்கள் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது.இதற்கு இருவர் வீட்டிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதும், காளியப்பன் தனது காதலி விஜயாவை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டிக்கு வந்து, திருமணம் முடிந்து அங்கேயே வாழ்க்கை நடத்தி உள்ளனர்.
இவர்களுக்கு மோகன்ராஜ் (15), வேல்முருகன் (14) என்ற மகன்களும் காளீஸ்வரி (9) என்ற மகளும் உள்ளனர்.
காதல் திருமணம் செய்ததால் இரு வீட்டினரும் அவர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளனர்.ஆனால் காளியப்பன் உறவினர் மட்டும் அவ்வப்போது இவர்கள் வீட்டிற்கு வருகை புரிவார்களாம்.
இதற்கிடையே காளியப்பன் உடல் நிலை சரி இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விடவே,எப்படியாவது குழந்தைகளை கரை சேர்த்து விட போராடி வந்துள்ளார் விஜயா.
பின்னர்,விஜயாவிற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது.இதற்கான சிகிச்சை கூட முறையாக எடுத்துகொள்ள முடியாமல் தவித்து வந்த விஜயா கடைசி கட்டத்தில்,அரசு மருத்துவ மனையிலேயே உயிர் நீத்தார்.
மூத்தமகன் மோகன்ராஜ் படிப்பை 8-ம் வகுப்புடன் நிறுத்தி விட்டு கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.
2-வது மகன் வேல்முருகனையும், மகள் காளீஸ்வரியையும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து அங்குள்ள இலவச விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்,விஜயா இறந்து விடவே,அவர்களுடைய சொந்தங்களை உதவிக்காக அணுகி உள்ளனர் பிள்ளைகள்.ஆனால் யாரும் முன் வரவில்லை
இதனால் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகளிடம் உதவி கேட்டு தங்களது தாயின் இறுதிசடங்கை மகன்கள் மோகன்ராஜ் மற்றும் வேல்முருகன் நிறைவேற்றினர்.
காதல் திருமணத்தால் இறந்த பின்பும் சொந்தங்கள் உதவ முன்வராத உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது மூன்று பிள்ளைகளும் என்ன செய்வது என்று அறியாமல் வாழ்கையில் தடுமாறுகிறார்கள்.
இவர்கள் வாழ்கையில் மேலோங்கி,சமூதாயத்தில் நன்மதிப்புடன் வாழ, சரியான உதவி கிடைத்தால் நல்லது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.