சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய் கம்லேஷ் தாகில் ரமணி பதவியேற்று கொண்டார். தாகில் ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய் கம்லேஷ் தாகில் ரமணி பதவியேற்று கொண்டார். தாகில் ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் கலந்து பங்கேற்றனர். உயர்நீதிமன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதி தஹில் ரமணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இந்திரா பானர்ஜி. சமீபத்தில் உச்ச திமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் பொறுப்பு தலைமை நீதிபதியுமான தாகில் ரமானி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதி தாகில் ரமானி கடந்த 2001 முதல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்தவர். சிவில், கிரிமினல் வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். 
இவர் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் தாகில் ரமானிக்கு திங்கள் கிழமை காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் 11.30 மணிக்கு தலைமை நீதிபதிக்கான முதல் அமர்வில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்குகிறார்.
