Asianet News TamilAsianet News Tamil

''ஐயோ என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே".. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை பலி

கார்த்திக் தனது மாமியார் வீட்டில் விருந்து முடித்து சி.கே.ஆசிரமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியுடன் வந்தார். நேற்று காலை அவர் வெளியே வந்து பார்த்த போது வீட்டின் வெளியே உள்ள மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனை அணைப்பதற்காக மின்சாரம் சுவிட்ச்சில் கைவைத்துள்ளார்.

New groom killed on 7th day of marriage in tirupattur
Author
Tirupattur, First Published Jun 21, 2022, 7:11 AM IST

திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே.ஆசிரமம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் கார்த்திக்(25). இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடந்தது. புதுமண தம்பதி மறுவீடு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தனர். 

New groom killed on 7th day of marriage in tirupattur

இந்நிலையில், கார்த்திக் தனது மாமியார் வீட்டில் விருந்து முடித்து சி.கே.ஆசிரமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியுடன் வந்தார். நேற்று காலை அவர் வெளியே வந்து பார்த்த போது வீட்டின் வெளியே உள்ள மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனை அணைப்பதற்காக மின்சாரம் சுவிட்ச்சில் கைவைத்துள்ளார். அப்போது மின்கசிவு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட கார்த்திக்கை குடும்பதத்தினர் அலறியடித்துக்கொண்டு  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

New groom killed on 7th day of marriage in tirupattur

இதனை கேட்டு உறவினர்கள் மற்றும் மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் விருந்து அழைத்த புதுமாப்பிள்ளையை கொலை செய்த மாமனார்.. பகீர் காரணம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios