new app introduced by kamal KH

#KH 

தீயவை நடக்கும் போது இந்த செயலி மூலம் குரல் கொடுக்க வேண்டும் என அரசியலில் குதிக்க அயத்தமாகி வரும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்

நடிகர் கமலின் பிறந்த நாளான இன்று சென்னை தி.நகரில் உள்ள GRT ஹோட்டலில் தன் ரசிகர்களுடன் உரை நிகழ்த்தினார்.அவருடைய பிறந்த நாள் சிறப்பாக, மக்கள் நலன் கருதி, புதிய செயலியை அறிமுகம் செய்து உள்ளார்.

இந்த ஆப் மூலம் என்ன செய்ய முடியும் தெரியுமா? 

#KH என பெயரிடப்பட்டு உள்ள, இந்த செயலி மூலம், யாருக்கெல்லாம் உதவி தேவை படுகிறதோ அவர்களை தேடி தேடி நல்லதை செய்வது தான் தன்னுடைய நோக்கம் என கமல் தெரிவித்துள்ளார் .

அதில் குறிப்பாக #maiamwhistle என்ற இணைப்பும் இந்த செயலியில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

தீயவை நடக்கும் போது , இந்த செயலி ஒரு கருவியாக செயல்படும் என்றும்
அதாவது தீயவை நடக்கிறது என்று தெரிந்தால்,உடனே விசில் அடியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் அடிக்கும் இந்த விசில் மூலமாகத்தான், நல்லது நடத்த முடியும்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார் 

விசில் அடித்தால் என்ன நடக்கும்?

விசில் அடித்தால் பேருந்து கூட நின்று விடும் அல்லவா. அதே போன்றுதான் இந்த விசிலை அடிக்கும்போது தீயவை நடப்பதை உடனே நிறுத்தி விட்டு நல்லதை செய்யலாம் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளார் கமல்.