தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த நாடா புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் புதுச்சேரி அருகே 210 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தொடர்ந்து வலுவிழந்து நாளை அதிகாலை வேதாரண்யம் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும். 

இதனால் அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகத்தில் கட்லோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும். அவ்வப்போது கனமழை இருக்கும். கடற்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ.வேகத்தில் வீசும்.