வரும் பிப்.14 ஆம் தேதி முனீஸ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
வரும் பிப்.14 ஆம் தேதி முனீஸ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்தச் சூழலில் தற்போது அவரை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். கடந்த மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனீஷ்வர்நாத் பண்டாரி சட்டப்படிப்பை முடித்து ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு நீண்ட நாட்கள் பணியாற்றிய பிறகு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2021 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.

அப்போது முதல் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதை அடுத்து வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முனீஸ்வர்நாத் பண்டாரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பிறந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பிறந்துள்ளார். தற்போது அவருக்கு 61 வயது நிரம்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் 62 வயது வரை இருக்க முடியும். ஆகவே இன்னும் 7 மாதங்களுக்கு இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
