தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி வழங்க எந்த தடையும் இல்லை. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியம் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் "உலக வெண்புள்ளிகள் தினத்தை" முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், வெண் புள்ளிகள் விழிப்புணர்வு 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வெண் குஷ்டம் என்ற பெயர் மாற்றி வெண் புள்ளிகள் என்று சொல்ல வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை மேற்கோள் காட்டி அரசாணை வெளியீடு செய்தது.
பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்
வெண்புள்ளிகள் பாதித்தவர்களை பள்ளிகளில் பாகுபாடு பார்க்க கூடாது என்று ஒரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. 2030 க்குள் தொழு நோய் இல்லா தமிழ்நாடு என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்
மேலும் ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதை பார்த்தால் நகைப்பு தான் வருகிறது. ஆஷா பணியாளர்கள் நேரடியாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒன்றிய அரசின் தேசிய நல வாழ்வு குழுமம் சார்பில் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு முன் வாங்கிய ஊதியத்தை விட 2 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக ஊக்க தொகை வழங்கப்படுகிறது. ஊக்க தொகை தொற்றா நோய்க்கு உதவினால் 500 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மூலம் 6000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 4ம் தேதி தொடங்க உள்ளது, 6ம் தேதி தீர்ப்பு வர உள்ளது. சில மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 36 மருத்துவ கல்லூரிகளும் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து 3 மணி நேரம் கொடூர தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
கேரளாவில் மர்ம காய்ச்சல் குறித்த கேள்விக்கு, இதுவரை எந்த மர்ம காய்ச்சலும் தமிழகத்தில் இல்லை. வந்தால் பாதுகாப்போம். எல்லை ஓர பகுதிகளில் 13 இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து பகுதியில் தொடர் கண்காணிப்பு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளார். டிஸ்டார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்றார்.
