லாரி கவிழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு - விளையாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த கொடுமை...!
கிருஷ்ணகிரி - நக்கல்பட்டி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் சாலையோரத்தில் விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா. இவர் பேரன்கள் 2 பேருடன் வீட்டின் தின்னையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநில குப்பம் பகுதியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிகொண்டு லாரி ஒன்று வந்தது.
அப்பகுதி மிகவும் குறுகலான சாலை என்பதால் அங்கு இருந்த லேசான பள்ளத்தில் லாரி சிக்கிகொண்டது. இதனால் லாரி திண்ணையில் அமர்ந்து இருந்த சிறுவர்கள் மூன்று பேர் மீதும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் அரிஷ் மற்றும் கவியரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சந்திரா படுகாயமடைந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் வாகனத்தை கொண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சந்திராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் நரசிம்மன் என்பவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.