Asianet News TamilAsianet News Tamil

பைக்கில் சென்ற கணவன், மனைவிக்கு சரமாரி அடி, உதை; மயங்கி விழுந்தவர்களிடம் நகை பறித்த மர்ம நபர்கள்...

சிவகங்கையில் பைக்கில் சென்ற கணவன், மனைவியை அடித்து மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். பின்னர், மனைவியிடம் இருந்து மூன்றரை சவரன் நகையைப் பறித்துக் கொண்டி தப்பிசென்றுவிட்டனர்.
 

husband and wife attacked while going in bike mystery people chain snatch
Author
Chennai, First Published Aug 11, 2018, 2:32 PM IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் குமாரவேலு. இவர் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எழுத்தராக உள்ளார். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இதே பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு நேற்று மகேஸ்வரி தனது கணவருடன் பைக்கில் சென்றிந்தார்.

sivagangai name க்கான பட முடிவு

இரவு 7 மணியளவில் அங்கிருந்து கிளம்பிய கணவன், மனைவி இருவரும் திருச்சி புறவழிச்சாலை குடியிருப்பு வாரியத்தின் அருகே வந்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் கணவன் - மனைவி வந்த பைக்கை எட்டி உதைத்தனர். 

husband and wife attacked while going in bike mystery people chain snatch

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் அந்த மர்ம நபர்கள். இதில் இருவரும் மயங்கி உள்ளனர். பின்னர், உமா மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த இரண்டு சவரன் தாலிச் செயின் உள்பட மூன்றரை சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

husband and wife attacked while going in bike mystery people chain snatch

மர்ம நபர்கள் அடித்தில் பலத்த காயம் அடைந்த கணவன், மனைவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் மருத்துவமனை வந்த காவலாளர்கள் கணவன், மனைவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios