மணல் கொள்ளை ரகசியம் அம்பலம்...! "ஊதுபத்தி" கொண்டு அரசு பில்லில் உள்ள எழுத்துக்களை அழிக்கும் திருட்டுத்தனத்தை நீங்களே பாருங்கள்..!
ஊதுபத்தி கொண்டு பில்லில் உள்ள எழுத்துகளை அழித்து மீண்டும் பயன்படுத்தி பல முறை மணல் கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது
அரசுக்கு காண்பிக்கப் படும் பில்லில், இந்த நாள் இந்த நேரத்தில் இந்த வண்டியில் ஒரு லாரி மணல் இந்த இடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என, ரசீது வழங்கப்படுகிறது.
இந்த ரசீதில் உள்ளபடியே, அந்த குறிப்பிட்ட நேரத்தில் மணல் அள்ளிவிட்டு, பின்பு ஊதுபத்தி கொண்டு அதனை அழித்து மீண்டும் வேறு ஒரு நேரத்தை அதில் எழுதுகிறார்கள்..மேலும் வேறு ஒரு வண்டி நம்பரை பதிவிட்டு மீண்டும் மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். அதாவது ஒரே ஒரு பில்லை பயன்படுத்தி, பல லாரி மணல் லோடு எடுத்து செல்கிறார்கள்.
பில்லில் உள்ள எழுத்துக்களை ஊதுபத்தி கொண்டு எவ்வாறு அழிக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்...