பாம்பனிலிருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்த முயன்றதாக மூன்று தமிழக மீனவர்களையும் ஒரு இலங்கை தமிழர் ஒருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

பாம்பனைச்சேர்ந்த சகாயம் என்பவருக்குச் சொந்தமான ஒரு நாட்டுப் படகு நேற்றிரவு கடலில் மீன் பிடிக்க சென்றது. அந்த படகு இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தது. கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த படகை இலங்கை கடற்பகுதியில் மன்னாரைஅடுத்த சிலாவத்தறை அருகே நடுக்கடலில் நிறுத்தி இலங்கை கடற் படையினர் சோதனையிட்டனர்.

அப்போது படகில் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி கடற்படையினர் கேட்ட போது படகில் உள்ளவர்களால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. இதனை அடுத்து படகையும் படகிலிருந்த சகாயம் உட்பட 3 மீனவர்கள் மற்றும் இலங்கையைச்சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.