Cydely head was lonely at the lipstick

மலையக வாழ்க்கை மகத்தானதுதான். கடும் டிராஃபிக் இல்லை, புகை இல்லை, ‘டேக் டைவர்ஸன்’ என்று அடிக்கடி ரூட் மாற்றி விடும் போலீஸ் இல்லை, மாடர்ன் வாழ்க்கையில் பாதை தவறிவிடுவார்களோ! என்று பிள்ளைகளை நினைத்து அஞ்ச வேண்டியதில்லை. மலையக வாழ்த்தை மகத்தானதுதான்!

ஆனால் சிட்டி வாழ்க்கையிலிருக்கும் சிக்கல்கள் மலை வாழ்க்கையில் இல்லைதான். ஆனாலும் கூட உயிருக்கும் உத்திரவாதம் இல்லையே என்பதுதான் கொடுமையே! அதுவும் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பின்றி கிடப்பதுதான் மலைக வாழ்க்கை அச்சத்தின் உச்சம்.

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பாதுகாக்கப்பட்ட வனம் நிறைந்த பகுதி. இங்கே இருக்கும் தேயிலை மற்றும் பிற மலைப்பயிர் எஸ்டேட்டுகளை நம்பி விளிம்பு நிலை குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றன.

வால்பாறை நகரை ஒட்டியே வனம் இருக்கிறது. இரவு நேரங்களில் யானை, மான், காட்டு மாடு ஆகியன நகரை ஒட்டிய பகுதிகளில் வந்து மேய்ந்துவிட்டு செல்லும். இவற்றை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பெரும் தேயிலைக்காடுகளுக்கு நடுவிலிருக்கும் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்குதான் தினம் தினம் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை.காரணம்?

சூரிய வெளிச்சம் முடிந்துவிட்டாலே இந்த மக்கள் தங்களது வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கரடி அல்லது சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி சின்னாபின்னமாவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

அதிலும் பெரிய மனிதர்கள் அசமந்தமாக கரடியிடம் சிக்கினால்தான் உண்டு. ஆனால் சிறுத்தையோ தனக்கு விலங்கு இரை கிடைக்காத நாட்களில் சட்டென்று குழந்தைகளை கவ்விக் கொண்டு சென்று தின்றுவிடும். கடந்த சில வருடங்களுக்கு முன் கெளசல்யா உள்ளிட்ட மூன்று குழந்தைகளை வால்பாறையின் லோயர் டிவிஷன் பகுதி குடும்பங்கள், சிறுத்தையின் பசிக்கு தாரை வார்த்திருந்தன.

இதன் பிறகு வனத்துறையின் நடவடிக்கைகள் இறுக்கமானதாலும், மக்கள் விழிப்புடன் இருந்ததாலும் இந்த பாய்ச்சல்கள் தடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மாலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த முஷரப் அலி மற்றும் சுபியா எனும் தொழிலாளர் தம்பதிகளின் நான்கு வயது மகன் சைதுல் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கிருக்கும் புதரில் மறைந்திருந்த சிறுத்தை சட்டென்று பாய்ந்து சிறுவனின் கழுத்தை கவ்வியது. இதில் சைதுல் அலற, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை கண்ட சிறுத்தை தனது பிடியை மேலும் இறுக்கியபடி சிறுவனை தரதரவென இழுத்தபடி தேயிலைக்காட்டு புதர்களுக்குள் சென்று மறைந்தது.

முரட்டுத்தனமான தேயிலை செடிகளிலும், கரடுமுரடான பாதையிலும் சிக்கி சிறுவன் துடிக்க, கூடவே சிறுத்தையின் பற்களும் வலுவாக பாயப்பாய ஒரு கட்டத்தில் சிறுவன் இறந்தான். அவனை தின்பதற்காக சிறுத்தை உதறிய உதறலில், அந்த குழந்தையின் தலைப்பகுதியானது உடம்பிலிருந்து தனியாக பிய்ந்துவிட்டது.

பின் தலையை மட்டும் கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை முகம் உள்ளிட்ட பாகங்களை தின்றுவிட்டு வெறும் மண்டை ஓட்டை மட்டும் விட்டுவிட்டு தப்பிவிட்டது.
புதருக்குள் தேடு தேடென தேடி குழந்தையின் உடலையும், மண்டை ஓட்டினையும் கண்டுபிடித்த அவனது பெற்றோர்களும், அக்கம் பக்க மக்களும் அழுது கதறியதை விளக்கவும் வேண்டுமா?

சைதுலை கொன்ற சிறுத்தை, மனித ரத்தத்தை சுவைத்து விட்டதால் இனி மீண்டும் மீண்டும் அது மனித ரத்தத்துக்கு ஆசைப்படலாம் என்பதே நடுமலை எஸ்டேட் குடும்பங்களின் அச்சமாக இருக்கிறது. ஒருவேளை நடுமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும் கூட இது அடுத்தடுத்த பகுதிகளுக்கு சென்று குழந்தைகளை குறிவைக்கலாம்.

கிட்டத்தட்ட தன் உயரத்துக்கு, பார்ப்பதற்கு சிறிய உருவமாக இருப்பதால்தான் குழந்தைகளை சிறுத்தை குறிவைத்து தாக்குகிறது என்பதால் ஒட்டுமொத்த வால்பாறையும் குலை நடுங்கிக் கிடக்கிறது. டவுன் அல்லாது எஸ்டேட்களில் வசிக்கும் குடும்பங்கள் தங்கள் வீட்டு குட்டிக் குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடியும், இருட்ட துவங்கியதுமே வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்காமலும் இருக்கும்படியும் வனத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.

வால்பாறையில் தங்களது குடியிருப்பிலிருந்து வனம் வழியே நடந்தே சென்று தூரத்திலுள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நினைத்தால்தான் பாவமாய் இருக்கிறது!..