மாணவி அனிதாவின் உடலுக்கு திருமா நேரில் அஞ்சலி..!!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார்.
இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழுமூரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கு எதிராகவும் கொஷங்களை எழுப்பினர்.