மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டாரா முதல்வர் ஜெயலலிதா....!!! “தி இந்து”வில் வெளிவந்த தகவலால் பரபரப்பு......!!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோ சனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து, சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார்.....

இந்நிலையில், , சில சமயத்தில் செயற்கை சுவாசம் தேவைப் படுவதால், மீண்டும் முதல்வர் ஜெயலிதாவை , தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக, தி இந்துவில் தற்போது செய்திகள் வெளியாகி , மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.......