720 சவரன் நகை கொள்ளையில் துப்பு துலங்கியது - தம்பியே அக்கா வீட்டில் திருடிய கொடுமை
சேலத்தில் இன்று காலை 720 சவரன் நகை கொள்ளை போனது. இதில், தம்பியே அக்காளின் வீட்டில் ஆட்களை வைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 720 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் விஜயலட்சுமி சகோதரர் மற்றும் சாமியார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பாஸ்கரனே ஆட்களை வைத்து அக்காள் விஜயலட்சுமி வீட்டில் திருட சொல்லியிருப்பது அம்பலமானது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.