Asianet News TamilAsianet News Tamil

VIRAL VIDEO | காதலியால்... காதலனின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்! சாதி பெயரைச் சொல்லி சரமாரி தாக்குதல்!

சங்கராபுரம் அருகே முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அப்பெண்ணின் உறவினர்கள் காதலனின் தாயை சாதிப் பெயரைச் சொல்லி சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Lovers mother was brutalized by her lovers relatives! Caste name barrage attack!
Author
First Published Jun 15, 2023, 10:58 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது S. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் சூர்யா. இந்த குடும்பத்தினர் அதே கிராமத்தில் முடி திருத்தும் வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா தொழில் கல்வி (ITI) முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதனிடையே, அப்பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்த நிலையில், சூர்யா திருமணம் செய்து கொண்ட மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் உறவினர்கள் மகன் எங்கே எனக் கேட்டு, சுமதியை தாக்க ஆரம்பித்துள்ளனர்.

சுமதி, மகன் இருக்கும் இடம் தெரியாது எனக்கூறியும், அதற்கு பெண்ணின் உறவினர்கள் உன்னை அடித்து கொலை செய்தால் உன் மகன் தானாக வருவான் எனக் கூறி சுமதியை மேலும் மேலும் தாக்கியுள்ளனர்.

சூர்யாவின் வீட்டில் இருந்து அவரது அம்மா சுமதியை அசிங்கமாக பேசியும், அவர் சார்ந்த சமுதாயப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியும் சூர்யாவின் வீட்டிலிருந்து தரதரதவென அடித்து இழுத்து வந்து அங்குள்ள ஒரு கோயிலில் அப்பெண்ணின் உறவினர்கள் சுமதியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



தாக்குதலில் படுகாயமடைந்த சூர்யாவின் தாய் சுமதி தற்போது கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Coimbatore News: எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் யார்?

ஒரு பெண் என்றும் பாராமல், சாதிய வெறியோடு ஊருக்கு மத்தியில் வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் அப்ப பெண்ணை தாக்கியவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சூர்யாவின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios