Asianet News TamilAsianet News Tamil

Super Saravana Store Raid: மலைக்க வைக்கும் சொத்து? தங்கத்தில் முதலீடு.. வசமாக சிக்கும் சூப்பர் சரவணா ஸ்டோர்?

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன.

Super Saravana Stores Income Tax Raid Completed
Author
Chennai, First Published Dec 5, 2021, 10:57 AM IST

சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் 4வது நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இதில், வரி ஏய்ப்பு, தங்கம் முதலீடு செய்ததற்கான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன.

Super Saravana Stores Income Tax Raid Completed

கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாகயும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன. இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினத்திற்கு சொந்தமான 12 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

Super Saravana Stores Income Tax Raid Completed

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையானது புரசைவாக்கம் பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 3 இடங்கள் மற்றும் தி.நகரில் 3 இடங்களில் முடிவடைந்த சோதனை முடிவடைந்த நிலையில் மீதமுள்ள இடங்களில் சோதனை தொடர்வதாக கூறப்படுகிறது. சோதனை முடிந்த இடங்களில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 

Super Saravana Stores Income Tax Raid Completed

அதேபோல், பல்வேறு பகுதிகளில் இடங்கள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த சோதனை தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், எவ்வளவு ரொக்கம் கைப்பற்றப்பட்டது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அனைத்து இடங்களிலும்  சோதனை நிறைவடைந்த பிறகே முழு விவரம் தெரியவரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios