Asianet News TamilAsianet News Tamil

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0’.. 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது.. 4,023 வங்கிக்கணக்குகள் முடக்கம்

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு 06.122021 முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

operation ganja vettai 3.0...13,320 cannabis dealers arrest
Author
First Published Dec 17, 2022, 8:51 AM IST

தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு 06.122021 முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கைகளின் போது 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய 1, 743 இருசக்கர வாகனங்களும், 148 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், 36,875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு, 521 டன் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய 618 இரு சக்கர வாகனங்களும் 487 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க;- திருப்பதி வந்த பக்தரிடம் பஸ்ஸில் நைசாக பேசி பழகிய இளம்பெண்.. லாட்ஜுக்கு அழைத்து சென்று என்ன செய்தார் தெரியுமா?

operation ganja vettai 3.0...13,320 cannabis dealers arrest

கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 616 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் தொடர் அதிரடி நடவடிக்கையாக கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும், 12.12.2022 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

operation ganja vettai 3.0...13,320 cannabis dealers arrest

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- மாடர்ன் உடை அணிந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

Follow Us:
Download App:
  • android
  • ios