Asianet News TamilAsianet News Tamil

Chennai Rain: ஏற்கனவே பெய்த மழையையே தாங்க முடியல.. மீண்டும் மிரட்டும் கனமழை.. பீதியில் உறைந்த சென்னைவாசிகள்.!

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த கனமழை 2016ம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுப்படுத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக சென்னையில் மழை விடாமல் கொட்டியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு  ஆளாகினர். 

Heavy rain again threatening Chennai
Author
Chennai, First Published Nov 26, 2021, 8:51 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த கனமழை 2016ம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுப்படுத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக சென்னையில் மழை விடாமல் கொட்டியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு  ஆளாகினர். இதனால், சென்னையின் எழும்பூர், வடபழனி, கொளத்தூர், வேளச்சேரி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கியதை அடுத்து ரயில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்னும் பல்வேறு இடங்களில் மழை வடியால் இருந்து வருகிறது. 

Heavy rain again threatening Chennai

இந்நிலையில், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. 

Heavy rain again threatening Chennai

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, ராமாபுரம், போரூர் பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல், புறநகர் பகுதியான தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பல்லாவரம், மாங்காடு, பெங்ககளத்தூர் உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், மாநகர பேருந்துகள் குறைவாக வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தற்காலிக ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios