பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகளவில் இருக்கும் தமிழர்களிடம் தனது பட்டிமன்ற பேச்சால் புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டி மன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். சாலமன் பாப்பையா தலைமையில், இவரும் ராஜாவும் சேர்ந்து விவாதிக்க தொடங்கினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவர் கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிட்டி வங்கியில் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். வங்கி பணிகளுக்கிடையே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அவரது உடல்நலம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தான் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் மூவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.