முச்சதம் அடித்த சென்னை.. கொரோனாவின் கோரப்பிடியில் கொங்கு மண்டலம்.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை, முன்பைப்போல இல்லாமல் கட்டுக்குள் இருக்கிறது.
இன்று ஒரேநாளில் 6109 பரிசோதனை செய்யப்பட்டதில் 43 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றே இல்லாத 4 மாவட்டங்களில் ஒன்றாக இருந்துவந்த புதுக்கோட்டையில் இன்றைக்கு ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் இன்று 18 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 303ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தடுத்த இடங்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளன. கோவையில் 133 பேரும் திருப்பூரில் 109 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.
கொங்கு மற்றும் வட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அந்தளவிற்கு இல்லை. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தாக்கம் பெரியளவில் இல்லை. கொரோனா இல்லாமல் இருந்த புதுக்கோட்டையிலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, கொரோனா இல்லாத மாவட்டங்கள்(தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை) எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 303
கோவை - 133
திருப்பூர் - 109
திண்டுக்கல் - 76
ஈரோடு - 70
நெல்லை - 62
செங்கல்பட்டு - 53
நாமக்கல், திருச்சி - 50
திருவள்ளூர் - 48
மதுரை, தஞ்சாவூர் - 46
நாகை - 44
தேனி - 43
கரூர் - 42
ராணிப்பேட்டை - 39
விழுப்புரம் - 36
திருவாரூர், தூத்துக்குடி - 27
கடலூர், தென்காசி - 26
சேலம் - 24
வேலூர் - 22
விருதுநகர் - 19
திருப்பத்தூர் - 17
கன்னியாகுமரி - 16
சிவகங்கை, திருவண்ணாமலை - 12
ராமநாதபுரம் - 11
காஞ்சிபுரம், நீலகிரி - 9
பெரம்பலூர் - 5
அரியலூர் - 4
கள்ளக்குறிச்சி - 3
புதுக்கோட்டை - 1.