சென்னையில் கொஞ்சம் கூட குறையாத கொரோனா வீரியம்.. விழுப்புரத்திலும் உக்கிரம்.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் தான் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக ஒரு வாரமாக தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி கொண்டிருக்கிறது. தினமும் சராசரியாக 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இன்று 12999 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 526 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 279 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். வழக்கம்போலவே இன்றும் சென்னையில் தான் அதிக பாதிப்பு. சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்துவரும் நிலையில், இன்னும் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.
கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் மூலமாக வடமாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்றும் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக விழுப்புரத்தில் 67 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு அந்த மாவட்டத்தில் 293ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று 40 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 224ஆக அதிகரித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடையவர்கள் மூலமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1867 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
அரியலூர் - 271
செங்கல்பட்டு - 224
சென்னை - 3330
கோவை - 146
கடலூர் - 394
தர்மபுரி - 4
திண்டுக்கல் - 108
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 59
காஞ்சிபுரம் - 114
கன்னியாகுமரி - 25
கரூர் - 47
கிருஷ்ணகிரி - 10
மதுரை - 113
நாகப்பட்டினம் - 45
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 95
புதுக்கோட்டை - 5
ராமநாதபுரம் - 25
ராணிப்பேட்டை - 60
சேலம் - 35
சிவகங்கை - 12
தென்காசி - 52
தஞ்சாவூர் - 66
தேனி - 56
திருப்பத்தூர் - 27
திருவள்ளூர் - 290
திருவண்ணாமலை - 82
திருவாரூர் - 32
தூத்துக்குடி - 30
திருநெல்வேலி - 80
திருப்பூர் - 114
திருச்சி - 65
வேலூர் - 29
விழுப்புரம் - 293
விருதுநகர் - 38.