சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் இன்று கணிசமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு.. மாவட்ட வாரியாக முழு விவரம்
கடந்த சில தினங்களாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், இன்று மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2757ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உறுதியாகும் கொரோனா பாதிப்பில் 80-90% சென்னையை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
ஆனால் இன்று 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 174 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 57 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களில் மற்ற மாவட்டங்களில் உறுதியான பாதிப்பு எண்ணிக்கையில் இதுதான் அதிகம். அதற்கு காரணம், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் என தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றவர்களுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் அதிகபட்சமாக 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளன.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
அரியலூர் - 26
செங்கல்பட்டு - 90
சென்னை - 1257
கோவை - 142
கடலூர் - 30
தர்மபுரி - 1
திண்டுக்கல் - 81
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 6
காஞ்சிபுரம் - 41
கன்னியாகுமரி - 16
கரூர் - 43
மதுரை - 88
நாகப்பட்டினம் - 45
நாமக்கல் - 59
நீலகிரி - 9
பெரம்பலூர் - 11
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 20
ராணிப்பேட்டை - 40
சேலம் - 33
சிவகங்கை - 12
தென்காசி - 38
தஞ்சாவூர் - 57
தேனி - 44
திருநெல்வேலி - 63
திருப்பத்தூர் - 18
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 68
திருவண்ணாமலை - 15
திருவாரூர் - 29
திருச்சி - 51
தூத்துக்குடி - 27
வேலூர் - 22
விழுப்புரம் - 53
விருதுநகர் - 32.