சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் முழுமையா கட்டுக்குள் வந்த கொரோனா.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சென்னையில் மட்டும்தான் உக்கிரமாக உள்ளது. சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. இன்று இன்று 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் வெறூம் 52 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது.
அதனால் பாதிப்பு எண்ணிக்கை 1937ஆக அதிகரித்துள்ளது. இந்த 52 பேரில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஏற்கனவே சென்னையில் 523 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொங்கு மாவட்டங்களில் இன்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை. இன்றைய 52 பாதிப்பில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குழந்தையும் மதுரையில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பாதிப்பு அதிகமாகவுள்ள இந்த மாவட்டத்திலும் இன்று ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
அரியலூர் - 6
செங்கல்பட்டு - 58
சென்னை - 570
கோவை - 141
கடலூர் - 26
தர்மபுரி - 1
திண்டுக்கல் - 80
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 6
காஞ்சிபுரம் - 19
கன்னியாகுமரி - 16
கரூர் - 42
மதுரை - 79
நாகப்பட்டினம் - 44
நாமக்கல் - 59
நீலகிரி - 9
பெரம்பலூர் - 7
புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 15
ராணிப்பேட்டை - 39
சேலம் - 31
சிவகங்கை - 12
தென்காசி - 38
தஞ்சாவூர் - 55
தேனி - 43
திருநெல்வேலி - 63
திருப்பத்தூர் - 18
திருப்பூர் - 112
திருவள்ளூர் - 53
திருவண்ணாமலை - 15
திருவாரூர் - 29
திருச்சி - 51
தூத்துக்குடி - 27
வேலூர் - 22
விழுப்புரம் - 48
விருதுநகர் - 32.