சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து..!
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தியணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தியணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் 6வது எண் வாயிலில் தீவிபத்து விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரக்கழிவுகள் எரிந்தன.
இதனையறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீ பரவாமல் தடுக்க தண்ணீரை அடித்து கட்டுப்படுத்தினர். இதனால், விமான போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடிகள் அடிக்கடி விழுந்து பதற்றை ஏற்படுத்தி வந்த நிலையில், விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.