கார் கவிழ்ந்து விபத்து... சென்னையை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!
நகரி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர்கள் ஏஞ்சல்(24), பிரதீப்ராஜ்(19), பிரேம்குமார்(27), ஜெனி(23), தீரஜ், சரண்(22). இவர்கள் 6 பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று பொது தேர்தல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த கைலாச கோணாவில் உள்ள அருவியில் குளிப்பதற்காக வந்தனர்.
பின்னர், அருவியில் குளித்த பிறகு வாலிபர்கள் மது அருந்தி விட்டு மீண்டும் காரில் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். அப்போது, வி.கே.ஆர்.புரம் அருகே எதிர் திசையில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியுள்ளனர் அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த ஏஞ்சல், பிரதீப்ராஜ், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த ஜெனி, தீரஜ், சரண் ஆகிய 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.