Asianet News TamilAsianet News Tamil

பொதுமக்களே உஷார்.. செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு.!

சென்னையில் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Boy killed by electric shock
Author
Chennai, First Published Oct 27, 2020, 6:13 PM IST

சென்னையில் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முக ராசா. இவரது மகன் சங்சய்(17). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை தேடு கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1வது தெருவில் வசித்து வரும் தனது உறவினர் பிரகாஷ் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பிறகு மூலக்கடை பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். 

Boy killed by electric shock

இந்நிலையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே நண்பரிடம் சஞ்சய் பேசியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக செல்போன் வழியாக சஞ்சய் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறியபடி அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த சக நண்பர்கள் சஞ்சயை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Boy killed by electric shock

இதையடுத்து, சஞ்சயின் நண்பர்களும், உறவினர்களும் அவரது உடலை சொந்த ஊரான பெரம்பலூருக்கு வேனில் எடுத்து சென்று கொண்டிருந்தனர். இதனையறிந்த உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை ஊருக்கு கொண்டு வந்தால்பிரச்சனை ஏற்படும். எனவே பிரேத பரிசோதனைக்கு பிறகு கொண்டுவாருங்கள் என கூறினர். இதனால், பாதி வழியிலேயே சென்னைக்கு திரும்பி வந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios