Asianet News TamilAsianet News Tamil

குட்நியூஸ்... கொரோனாவை அடக்கி ஒடுக்கும் தமிழகம்... கட்டுக்குள் வந்த பாதிப்பு.. உயிரிழப்பு மட்டும் உச்சம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,520ஆக உயர்ந்துள்ளது. 
 

5871 Coronavirus positives case...119 people dead
Author
Chennai, First Published Aug 12, 2020, 7:06 PM IST

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,520ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று  5,871 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,844 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 27 பேர் அடங்குவர். இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,520ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 69,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 33,10,036 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

5871 Coronavirus positives case...119 people dead

சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,2059ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,521பேர் ஆண்கள், 2,250 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,89,677ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,24,814 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29ஆகவும் உள்ளது. 

5871 Coronavirus positives case...119 people dead

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 119 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 5,278ஆக உயர்ந்துள்ளது. இதில், தனியார் மருத்துவமனையில் 41 பேரும், அரசு மருத்துவமனையில் 78 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று 5,633 பேர் உட்பட இதுவரை 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios