இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்ற 3வது இந்திய வீராங்கனை இவர் ஆவார்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, சாமர்கண்டில் நடைபெற்ற ஃபிடே (FIDE) மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சாம்பியனான வைஷாலி

திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற 11-வது மற்றும் இறுதிச் சுற்றில், வைஷாலி சீனாவின் டான் சோங்யியுடன் போட்டியிட் டிரா செய்தார். இதன் மூலம், அவர் ஒட்டுமொத்தமாக எட்டு புள்ளிகளைப் பெற்றுப் போட்டியை நிறைவு செய்தார். ரஷ்யாவின் கேட்டரினா லாக்னோவும் எட்டு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், சிறந்த டைபிரேக் ஸ்கோரின் அடிப்படையில் வைஷாலி சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம், வைஷாலி உலக சாம்பியன் ஜூ வென்ஜுனை எதிர்கொள்ளும் சவாலுக்குத் தயாராகிவிட்டார்.

Scroll to load tweet…

திவ்யாவுக்குப் பின் வைஷாலி

முன்னதாக, திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி இருவரும் ஜூன் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இடம்பிடித்தனர். திவ்யா தேஷ்முக் அந்த உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வைஷாலியின் இந்த வெற்றி, இந்திய செஸ் விளையாட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இது இந்திய வீரர்களின் சர்வதேச செஸ் அரங்கில் வளர்ந்து வரும் திறமையைக் காட்டுகிறது.