Asianet News TamilAsianet News Tamil

Kohli vs BCCI: தேர்வாளர்கள் மொத்த பேரும் சேர்ந்தே கோலி ஆடியதில் பாதி மேட்ச் கூட ஆடல..! முன்னாள் வீரர் அதிரடி

இந்திய அணி தேர்வாளர்கள் ஆடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை, விராட் கோலியின் மொத்த போட்டிகளில் பாதி கூட இருக்காது என்ரு இந்திய முன்னா வீரர் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
 

former cricketer kirti azad opines all the selectors put together have not even played half the number of games Virat Kohli has for India
Author
Chennai, First Published Dec 18, 2021, 2:40 PM IST

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில், தெளிவு கிடைக்காமல் சர்ச்சை நீடிக்கிறது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் பலருக்கு அதிருப்தியளித்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள கோலியை, பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது பலரது கருத்து.

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் விராட் கோலி அதை ஏற்க மறுத்து டி20 கேப்டன்சியிலிருந்து விலகியதால், வெள்ளைப்பந்து அணிகளுக்கு இருவேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால் தான் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனது கேப்டன்சி நீக்கம், ரோஹித்துடனான உறவு என தன்னை சுற்றி பிண்ணப்பட்ட அனைத்து சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்தார் விராட் கோலி.

அப்போது கங்குலி கூறிய கருத்து மற்றும் தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து பேசிய விராட் கோலி, பிசிசிஐ என்னை டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை. டி20 கேப்டன்சியிலிருந்து விலகும் என் முடிவை தெரிவித்தவுடன் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான், என்னை கேப்டன்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார். நான் சரி என்றேன். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன்பாக என்னிடம் கேப்டன்சி விஷயம் குறித்து தேர்வாளர்கள் பேசவேயில்லை. பிசிசிஐயும் என்னை டி20 கேப்டன்சியில் நீடிக்குமாறு அறிவுறுத்தவில்லை என்றார் கோலி. 

விராட் கோலி - பிசிசிஐ இடையேயான விவகாரம், கருத்து முரண்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய விவாதக்களமாக மாறிய நிலையில், இதுகுறித்து முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான கீர்த்தி ஆசாத் மிகக்கடுமையான கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கீர்த்தி ஆசாத், கேப்டனை மாற்றும் முடிவு தேர்வாளர்களுடையதுதான் என்றாலும், அதை பிசிசிஐ தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தியிருக்க முடியாது. நானும் தேர்வாளராக இருந்திருக்கிறேன். அணி தேர்வு முடிந்ததும், அதை பிசிசிஐ தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னர் தான் அணி அறிவிக்கப்படும். எனவே கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கும் முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலியின் ஒப்புதலை பெறாமல் அறிவித்திருக்க முடியாது. எனவே கங்குலியாவது கோலியிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கலாம். கோலிக்கு கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வருத்தம் கிடையாது. அதை அவரிடம் தெரியப்படுத்த விதம் தான் வருத்தம். 

தற்போதைய அணி தேர்வாளர்கள் மிகச்சிறந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கையை கூட்டினால் கூட, விராட் கோலி ஆடிய போட்டிகளின் எண்ணிக்கையில் பாதி கூட இருக்காது. இதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என்று கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios